ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!
பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன.
இந்தநிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் கூடியிருந்தபோது ஜெர்மனி இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்துக் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கொர்னேலியஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
கூட்டணி நாடுகள்
மேலும் தெரிவித்த அவர், நேட்டோ என்பது அதன் கூட்டணி நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டமைப்பேயன்றி, இந்தப் போருடன் அதற்குத் தொடர்பில்லை என வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போருக்கு முன்னதாக அமெரிக்கா தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதால், இது நேட்டோவுக்கோ அல்லது ஜெர்மன் அரசாங்கத்திற்கோ உரிய விவகாரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது இராணுவ இலக்குகள் எப்போது எட்டப்படும் என்பது குறித்து மேலதிக விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வடேபுல் தெரிவித்துள்ளார்.
மூலோபாய இலக்குகள்
இதே கருத்தைப் பிரதிபலித்துள்ள எஸ்தோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா, ட்ரம்பின் மூலோபாய இலக்குகள் மற்றும் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் கோரிக்கை நேட்டோ அமைப்பின் முறையான வழிமுறைகள் ஊடாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அதனைத் தாங்கள் கவனமாகப் பரிசீலிக்க முடியும் எனப் போலந்து வெளியுறவு அமைச்சர் ரடெக் சிகோர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்னிச்சையான போர்த் திட்டங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே பெரும் தயக்கத்தையும் கேள்விகளையும் உருவாக்கியுள்ளதை இந்த இராஜதந்திர நகர்வுகள் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |