10 குழந்தைகளை பெற்றால் பரிசு -ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு
10 குழந்தைகளை பெற்றால் பரிசு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தம்பதிகளுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 இலட்சம் பரிசுத்தொகையோடு விருது வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
உரிய பெண்ணுக்கு வழங்கப்படும்.
இந்த தொகையானது முறையாக 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தைகளை பெற்றெடுத்த உரிய பெண்ணுக்கு வழங்கப்படும். மேலும் அந்த பெண்ணுக்கு சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த அறிவிப்பை பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது உண்மையில் மிகவும் பிற்போக்குத்தனமானது. அவநம்பிக்கையானது. மேலும் ரஷ்ய அரசு வழங்கும் ரூ.13 இலட்சத்துக்காக 10 குழந்தைகள் பெற்று கொள்வது என்பது மிகவும் சிரமமானது.
அத்துடன் ரஷ்ய நாட்டில் தற்போது பொருளாதார, சமுகம் சார்ந்த மற்றும் அரசியல் பிரச்சனைகள் உள்ளன. இந்த சூழலில் 10 குழந்தைகள் பெற்று கொள்வது என்பதை கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது என விமர்சனம் செய்து வருகின்றனர்.