ஒரு வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை
இலங்கையில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று (27) 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று 22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்த விலை
அத்துடன், நேற்றைய நாளுடன் (26) ஒப்பிடும் போது இன்று ஆறாயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்றைய நாளில் 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்று (26) பிற்பகல் முதல் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
நேற்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்ட போதிலும், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரித்ததுடன் 22 கரட் தங்க பவுண் ரூபாயால் 1800 ரூபாயால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |