தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருக்க கோட்டாபயவுக்கு வாய்ப்பு
14 நாட்களுக்கு நீடிப்பு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதை நீடிக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக இங்கு வந்த போது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்து உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகள் உயர்வடைந்ததால், பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
பயண அனுமதிச் சீட்டு முடிவடையும் தருணம்
இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும் நிலவிய கடும் எதிர்ப்பு காரணமாக ஜூலை 14 அன்று, மாலத்தீவில் இருந்து விமானத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கியிருந்தது.
வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு முடிவடையும் தருணத்தில், மேலும் 14 நாட்களுக்கு பயண அனுமதிச் சீட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .