சிஐடியில் முன்னிலையாகாத கோட்டாபய ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நடைபெறும் விசாரணை ஒன்றுக்காக வருமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
எழுத்துபூர்வ அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (06) எழுத்துபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை பலருக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச அங்கு முன்னிலையாகாமைக்கான சரியான காரணங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |