சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்…

Sri Lankan Tamils Sri Lanka
By Theepachelvan Feb 07, 2026 09:28 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report

சிறிலங்கா சுதந்திர தின நாளில், தமிழர் தேசத்தின் தாய்மார்களும் தந்தையர்களும் ஊன்றுகோல்களை ஏந்தியபடி, தள்ளாடிய நிலையில் கண்ணீரோடும் கம்பலையோடும் நடாத்திய போராட்டம் கல்லாயிருக்கும் மனிதர்களின் மனங்களையும் கரைக்கும் காட்சியென இருந்தது.

உண்மையில் போராட்டத்தின் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, மனம் தாங்க இயலாத துயரத்தை நிரப்பியது.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலை மனம் இன்னும் ஏன் கரையவில்லை என்ற கேள்வி மட்டும்தான் எஞ்சியது.

இந்த உலகம் ஈழத் தமிழ் மக்களின் இப்பெருந்துயர நிலை கண்டும் ஒரு தீர்மானத்தை எடுக்காமல் உலகின் மோசமான அளவுகோல்களின்படியெ ஈழப் பிரச்சினையை ஏன் அணுகிறது என்ற சினமும் துயரமும் பெருகுகிறது.

சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு துவங்கப்பட்ட நாள்!

சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு துவங்கப்பட்ட நாள்!

ஒடுக்குமுறையின் ஆரம்ப நாள்

1948 பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை “சுதந்திரம்” பெற்ற தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம், தீவின் அனைத்துத் தேசங்களுக்கும், இனங்களுக்கும், மொழிகளுக்கும் சமமாகப் பகிரப்பட்டதா என்ற கேள்வி இன்னமும் தமிழர் மனங்களில் பெருங்காயமாகத் துடிக்கிறது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அடிமைத் தன்மை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழர் தாயகத்திற்கு அந்த நாள் ஒரு விடுதலையின் துவக்கமாக இல்லாமல் மாறாக, புதிய ஒடுக்குமுறைகளின் ஆரம்ப நாளாகவே அமைந்தது.

அதனாலேயே, சிறிலங்கா சுதந்திர தினம் தமிழர் வரலாற்றில்  சுதந்திரத்தை உணரும் நாளாக அன்றி, எதிர்ப்பின் நினைவாக, கிளர்ந்தெழும் நிலத்தின்  பெருங்குரல் வெடிக்கும் நாளாக வரலாறு முழுவதும் தொடர்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான அரசியல் கட்டமைப்பு, பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தியது. 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள், நூற்றுக்கணக்கான ஆயிரம் மலையகத் தமிழர்களை நாட்டிலற்றவர்களாக்கின.

இது, சுதந்திரத்தின் முதல் பலி தமிழர்களே என்பதைத் தெளிவாகச் சுட்டியது. “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோஷங்கள், சிங்கள மொழி ஆதிக்கத்தை அரசியல் அதிகாரமாக மாற்றின.

1956ஆம் ஆண்டின் “சிங்களம் மட்டும்” சட்டம், தமிழர் தாயகத்தின் பண்பாட்டு, மொழி அடையாளங்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாக மாறியது.

குருதியில் நனைந்த தம்பலகாமம்…!

குருதியில் நனைந்த தம்பலகாமம்…!

ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர் தாயகம்

இந்த அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழர் தாயகம் மௌனமாக இருக்கவில்லை. ஆரம்பகட்டத்தில், தமிழர் தலைமை அமைப்புகள் சமாதானமான அரசியல் வழிமுறைகளையே தேர்ந்தெடுத்தன.

சம உரிமை, மொழி சமத்துவம், சுயாட்சி ஆகிய கோரிக்கைகள் அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோரிக்கைகளுக்கு பதிலாக, ஒப்பந்த மீறல்கள், வன்முறைத் தாக்குதல்கள், இனக் கலவரங்கள் தான் தமிழர்களுக்குக் கிடைத்தன.

1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இனவழிப்புப் படுகொலைகள், தமிழர் தாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அரச வன்முறையின் அடையாளங்களாக நீண்டன.

குறிப்பாக, யாழ் நூலக எரிப்பு, தமிழர் அறிவுப் பாரம்பரியத்தின் மீது ஏவப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பாகவே நிகழ்த்தப்பட்டது. இந்த அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக, தமிழர் தாயகத்தில் ஒரு புதிய அரசியல் உணர்வு கிளர்ந்தெழுந்தது.

அது வெறும் உரிமைக் கோரிக்கையாக அல்ல. தன்னாட்சி, தன்னியக்கம், இறுதியில் தனித்த அரசியல் அங்கீகாரம் என்ற இலக்கை நோக்கி நகர்ந்தது.

இளம் தலைமுறையின் மனங்களில், சுதந்திர தினத்தின் கொண்டாட்டம் ஒரு புனிதமான நிகழ்வாக அல்ல; மறுக்கப்பட்ட உரிமைகளின் நினைவூட்டலாக மாறியது.

சிறிலங்கா சுதந்திர தினம் வந்த போதெல்லாம், தமிழர் தாயகம் தனது காயங்களை மீண்டும் நினைவுகூரும் அதேவேளை, எத்தகைய நிலையிலும் கிளர்ந்தெழும் ஆற்றலை மீளப் புதுப்பித்துக் கொண்டது. அதற்கு அண்மைய சுதந்திரதினமும் தக்க சான்றாகியது.

உயிராயுதமாகிய தியாகி முத்துக்குமார்: எரிந்த உடலில் எழுந்த ஒரு இனத்தின் சாட்சி!

உயிராயுதமாகிய தியாகி முத்துக்குமார்: எரிந்த உடலில் எழுந்த ஒரு இனத்தின் சாட்சி!

போர் தொடுத்த நாள்

1970களுக்குப் பின்னர், இந்த அரசியல் விழிப்புணர்வு ஆயுதமயமான எதிர்ப்பாக உருவெடுத்தது. அது ஒரு நாளில் தோன்றியதல்ல. சுதந்திரத்தின் பெயரில் தொடர்ச்சியாக மறுக்கப்பட்ட நீதியின் விளைவு.

தமிழர் தாயகத்தில் கிளர்ந்தெழுந்த அந்தப் போராட்டம், ஒரு இனத்தின் வாழ்வுரிமை, அடையாளம், அரசியல் கௌரவம் ஆகியவற்றைக் காக்கும் போராட்டமாகப் பரிணமித்தது.

சுதந்திர தின விழாக்களில் பட்டாசுகள் வெடித்தபோது, தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையின் நினைவுகள்தான் வெடித்தன. இழப்புகளின், தியாகங்களின், எதிர்ப்பின், எதிர்பார்ப்பின் நினைவுகள்ளுடனேயே எம் மக்கள் உள்ளனர்.

இப்படியாக காலம் காலமாக ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் திட்டமிட்ட பாரபட்சங்களும் ஈழத் தமிழினத்தை மிகவும் பாதித்தது. அழிக்கப்படும் ஒரு இனம் தன்னைக் காத்துக் கொள்ள தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆனால் ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் சிங்கள தேசம் தமிழர்களின் விடுதலை தேசத்திற்கு எதிரான போரின் பிரகடன நாளாக அனுஷ்டித்தது.

குறிப்பாக சுதந்திர நாளில் தமிழர் தேசம்மீது பாரிய விமானத்தாக்குதல்களும் படுகொலைகளும் நடந்தன. இதனால் தமிழர்களுக்குத் தனிநாடு ஒன்றே பாதுகாப்பு என்று ஈழத் தமிழ் மக்கள் தீர்மானித்தார்கள்.

அந்தக் கனவும் முயற்சியும் ஒரு நிழல் தேசத்தை, நாட்டை உருவாக்கியது.

இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…

இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…

கல் கரையும்… அநுரவின் மனம்

இந்த நிலையில் சிறிலங்கா அரசு மாபெரும் இனப்படுகொலைப் போரை நடாத்துவதன் மூலம், தமிழர்களின் சுதந்திர நிழல் அரசை அழிப்பதுடன் ஈழ மக்களையும் படுகொலை செய்துவிடலாம் என்ற திட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடாத்தியது.

இதனால் போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். பல ஆயிரம் மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள். போர்க்களத்தில் சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கையளிக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களுக்கான நீதியை வலியுறுத்தியே சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழர் தேசம் கிளர்ந்தெழுந்தது.

ஜனாதிபதி அநுரவை, ஊழலை ஒழிப்பவர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால் படுகொலை ஊழலை இனவழிப்பு ஊழலை குறித்து மாத்திரம் அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மிகவும் நல்ல ஜனாதிபதி என அநுரவை அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால் போராட்டத்தின்போது பெருந்துயரத்துடன் காணப்பட்ட தமிழ் மக்களின் நிலை கண்டு ஜனாதிபதி அநுரவின் மனம் மட்டும் கரையவில்லை என்பதுதான் பெரிய வேடிக்கை.

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

2026 இல் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2026 இல் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026