ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்ட ட்ரம்ப்!
ஈரானில் இன்னும் சில சுத்தப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானின் ஆயுதப் படைகளை அமெரிக்கா ஏற்கனவே கணிசமாக அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தம்
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அங்கு போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டதால் விடுபட்டுப்போன பணிகளை முடிக்கத் தாங்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கைக்குத் தான் தனிப்பட்ட முறையில் ஆதரவாக இருக்கவில்லை என்றும் மற்ற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கியே இதற்குச் சம்மதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்குச் செய்யும் ஒரு உதவியாகவே இந்த போர்நிறுத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்து சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |