கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம் - உறவினர் கடும் எதிர்ப்பு
அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தாம் அரசியல் புலனாய்வு இல்லாதவர் ஆனால் சில நிர்வாக பதவிகளில் திறமையான அதிகாரி என்று கோட்டாபய ராஜபக்ச கூறுகிறார். ஆனால் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் அது முட்டாள்தனம் என உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு
இதேவேளை நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே இன்று செய்ய வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
