கோட்டா கோ கமவில் அழிக்கப்பட்ட சொத்துக்கள் : முன்னாள் எம்பிக்களுக்கு வலுக்கும் நெருக்கடி

Sri Lanka Politician Supreme Court of Sri Lanka Gota Go Gama
By Jaso Jul 17, 2025 03:03 PM GMT
Report

முந்தைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிக்கப்பட்டதால், அரசாங்கத்திடமிருந்து பெற்ற அதிகளவு இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரும் அடிப்படை உரிமைகள் மனுவை, உண்மைகளை உறுதிப்படுத்த நவம்பர் 13 ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் நடைபெற்ற 'கோட்டா கோ கம' போராட்ட தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த வன்முறையால் இந்த சொத்து சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணை

இந்த அடிப்படை உரிமைகள் மனுவை சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கலாநிதி ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.

கோட்டா கோ கமவில் அழிக்கப்பட்ட சொத்துக்கள் : முன்னாள் எம்பிக்களுக்கு வலுக்கும் நெருக்கடி | Gotabaya To Appear In Court Supreme Court Orders

இந்த மனு நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவின் பிரதிவாதிகளாக கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா, முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் டிரான் அலஸ் மற்றும் பிரசன்ன ரணதுங்க, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் மற்றும் 15 பேர் அடங்குவர்.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட அறிவிப்பு

மே 9, 2022 அன்று போராட்டக் களத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையின் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 43 பேருக்கு முந்தைய அரசாங்கம் 1.22 பில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்கியதாக பெப்ரவரி 5, 2022 அன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் அறிவித்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கமவில் அழிக்கப்பட்ட சொத்துக்கள் : முன்னாள் எம்பிக்களுக்கு வலுக்கும் நெருக்கடி | Gotabaya To Appear In Court Supreme Court Orders

பொது நிதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் சொத்துக்களை அழித்ததற்காக ஒரு நபருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச இழப்பீடு 2.5 மில்லியன் ரூபா என்றும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.

ஊழலுக்கு ஆதரவு வழங்கும் அரசாங்கம் : கொந்தளிக்கும் அர்ச்சுனா எம்.பி

ஊழலுக்கு ஆதரவு வழங்கும் அரசாங்கம் : கொந்தளிக்கும் அர்ச்சுனா எம்.பி

 முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவு

இந்த பணம் உரிய சட்ட நடைமுறைக்கு புறம்பாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.

கோட்டா கோ கமவில் அழிக்கப்பட்ட சொத்துக்கள் : முன்னாள் எம்பிக்களுக்கு வலுக்கும் நெருக்கடி | Gotabaya To Appear In Court Supreme Court Orders

எனவே, முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், சொத்துக்கள் அழிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்களை முறையாக மதிப்பீடு செய்த பிறகு, சட்டபூர்வ முறையில் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் மேலும் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் கூறி, சட்டமா அதிபர் இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மனுவை ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

யாழ்.மாநகரசபையின் செயற்பாடு: ஈபிடிபியின் குற்றச்சாட்டு

யாழ்.மாநகரசபையின் செயற்பாடு: ஈபிடிபியின் குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015