மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞன் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தூண் இடிந்து வீழ்ந்து உயிரிழப்பு
காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல் குறித்த இளைஞன் கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வந்த போது தூண் இடிந்து அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணை
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |