பொன்சேகாவின் திட்டங்களுக்கு உடன்பட மறுத்த கோட்டாபய!! வெளிவரும் பின்னணி
எனது திட்டங்களுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடன்படவில்லை, அதனாலேயே ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று (15) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“நாட்டின் நிலைமை தொடர்பாக பிரதமரிடம் எந்த திட்டமும் இல்லை, இந்த அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகிறது.
நான் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அதுதான் பிரச்சினை.
ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை. செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு அரச தலைவர் உடன்படவில்லை.
இதனையடுத்தே, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்” என குறிப்பிட்டார்.