மகிந்த குடும்பத்தின் மீது நேரடியாக கை வைக்க அரசுக்கு அச்சம் : மனோ எம்.பி கிண்டல்
Mahinda Rajapaksa
Mano Ganeshan
NPP Government
By Sumithiran
மகிந்த குடும்பம் (mahinda family)மீது நேரடியாக வைவைக்க அநுர அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(mano ganeshan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தனது மனைவிய கைது செய்ய வேண்டான்னு அரசுக்கு சொல்லுங்கன்னு மஹிந்த, கண்டி பெளத்த மகா நாயக்கர்ட உதவி கேட்கல்ல எனவும், இந்த செய்தி அரசு தரப்பால் பரப்பபடுது எனவும் நாமல் கூறுகிறார்.
மகிந்த இப்படி உண்மையா உதவி கேட்டாரா
மகிந்த இப்படி உண்மையா உதவி கேட்டாரா..! கேட்டிருந்தா நாமல் இப்படி சொல்லுவாரா? என்ற லொஜிகல் கேள்விகள் எழுகின்றன.
எது எப்படியோ, ஷிரந்தி ராஜபக்சவை கைது பண்ணி ஸ்கோர் பண்ண அரசு தரப்பு விரும்பினாலும், மகிந்த குடும்பத்தின் மீது நேரடியா கை வைக்க அரசுக்கு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருப்பது தெரியுது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்