தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - விமானப்படை அதிகாரி கறுப்புப் பட்டியலில்
By Vanan
தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புடைய முன்னாள் உயர்மட்ட விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை கறுப்புப் பட்டியலில் சேர்க்க எடுக்கப்பட்ட முடிவை அரசாங்கம் இன்று உறுதிசெய்துள்ளது.
இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரம்மித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான கருத்துக்களை வெளியிட்டதற்காகவே எயார் வைஸ்மார்ஷல் சம்பத் துயகொண்டா கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்காக அரசியல் பணியில் ஈடுபட்டதற்காக சம்பத் துயகொண்டா கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்ற கூற்றை அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி