அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..! அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்
Government Employee
Sri Lanka
Sri Lankan Peoples
By pavan
இலங்கை அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், 1905 என்ற இலக்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகள்

மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளின் லஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி