சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக பார்க்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே தற்போதைக்கு சிறைச்சாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அனுமதியின்றி எந்தவொரு மாற்றத்திற்கும் அனுமதி்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மோதல் காரணமாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |