சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுந்தூரப் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் 200 சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.ஏ. எம்.எம்.ஏ.என். தம்மிகா ரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான கொள்முதல் செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய திட்டம்
இதற்கமைய, நீண்ட விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளில் சுமார் 170 பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலைகளின் சேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
மீதமுள்ள பேருந்துகள் கொழும்பிலிருந்து நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கான நெடுந்தூர சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |