புலம்பெயர்ந்தோருக்காக வேட்டையாடப்பட்ட கடற்படை தளபதி: ஆவேசத்தில் நாமல்!
புலம்பெயர்ந்தோர் மற்றும் சில பிற குழுக்களின் நலன்களுக்கு சேவை செய்ய அரசாங்கம் அரசியல் ரீதியாக மிகவும் இழிவான முறையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் கடற்படைத்தளபதியின் கைதை மேற்கோற்காட்டி, ஊடக சந்திபொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதியின் பிணை
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைது செய்வதில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) செயல்பட்ட விதத்தை குருநாகல் உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையாக விமர்சித்து நேற்று பிணை வழங்கியதை தொடர்ந்து நாமலின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்போது, சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் சந்தேக நபரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதியின் சமீபத்திய பிணை பரிசீலனை, நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி, காவல்துறை மற்றும் சிஐடி எவ்வாறு முறையற்ற முறையில் செயல்பட்டன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக நாமல் கூறியுள்ளார்.
காவல் துறைக்கு அவமதிப்பு
தற்போது, சிஐடியின் பொய்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளாகவும் இதன் மூலம், காவல் துறை அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதத்தை தோற்கடிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நேர்மையான காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட தீங்கு மிகவும் கடுமையானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, புலம்பெயர்ந்தோர் மற்றும் சில பிற குழுக்களின் நலன்களுக்கு சேவை செய்ய அரசாங்கம் அரசியல் ரீதியாக மிகவும் இழிவான முறையில் செயல்படுவதாக நாமல் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
