சட்டவிரோத இடமாற்ற நடைமுறை: நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் போராட்டம்
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதனடிப்படையில், இன்று (02-04-2026) காலை 8:00 மணி முதல் 24 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இடமாற்ற நடைமுறை
சுகாதார அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள், மருத்துவர்களின் சேவையைப் பாதிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், 24 மணிநேரத்திற்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவமனை
நாடு முழுவதுமுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெளிநோயாளிப் பிரிவு (OPD) மற்றும் ஏனைய மாதாந்த முறைமை சிகிச்சைகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமைபோன்று இயங்குமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மீண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்