வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Northern Province of Sri Lanka
By Dilakshan
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த வீட்டுவசதித் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 1,424 குடும்பங்களும் கிளிநொச்சியில் 29 குடும்பங்களும் உட்பட 276,883 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 919,109 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமைச்சின் முன்மொழிவு
அதன் அடிப்படையில், நிரந்தர வீடுகள் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிரதி அமைச்சர் நடந்து வரும் திட்டங்களை ஆய்வு செய்துள்ளார்.
இதேவேளை, 2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் வீட்டுவசதிக்கு கூடுதல் நிதி ஒதுக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு முன்மொழிந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி