சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
"சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், சுரேஷ் சலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இரண்டாவது தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதியன்று முடிவடையும் நிலையில், சுரேஷ் சலேயை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |