சுரேஸ் சலேவுக்கு சிஐடியில் ஏற்பட்டுள்ள நிலைமை! விமலுக்கு அரசாங்கம் சாட்டையடி
குற்றப்புலானாய்வு திணைக்களத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் சுரேஸ் சலே தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மோசமாக நடத்தப்படுவதாக விமல் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர நளிந்த ஜயதிஸ்ஸ அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதன்படி, தனக்குத் தெரிந்தவரை சிஐடியில் இருந்து இதுபோன்ற நிலைமைகள் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடுமையான அசௌகரியம்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளபோது, சலே செய்தித்தாள்களை விரித்து தூங்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், எலிகள் அவர் மீது ஓடுவதாகவும், மோசமான சுகாதார நிலைமைகளுக்கு மத்தியில் அவர் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் விமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், பல சந்தேக நபர்கள் முன்னர் விசாரணைக்காக சிஜடியின் நான்காவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அத்தகைய நிலைமைகள் குறித்து யாரும் முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், சிஐடி இந்த விடயத்தை ஆராய்ந்து தேவைப்பட்டால் விசாரணையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |