எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்து!

Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Theepachelvan Jul 04, 2026 01:10 AM GMT
Report

தமிழ் எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் பிரதீபனின் இரண்டு நூல்களின் பிரதிகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து சர்வதே அளவில் எழுத்தாளர்களுக்காகச் செயற்படுகின்ற  PEN International ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

எஞ்சியுள்ள அனைத்து நூல்களையும் தாமதமின்றி விடுவிக்குமாறும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு போன்ற தெளிவற்ற சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி இலக்கிய வெளிப்பாட்டை ஒடுக்குவதையும் சிறுபான்மை மக்களின் குரல்களை மௌனமாக்குவதையும் நிறுத்துமாறும் அது இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் PEN International-இன் அமைதிக்கான எழுத்தாளர்கள் குழு தலைவர் ஜெர்மன் ரோஹாஸ் தெரிவித்துள்ளதாவது, 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!

தீவிரமான கேள்விகள்

“தீபச்செல்வன் பிரதீபனின் நூல்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, இலக்கியச் சுதந்திரத்தின் மையத்தையே தாக்கும் தணிக்கைச் செயலாகும். எழுத்தாளர்கள், தங்களது படைப்புகள் அரச அதிகாரிகளால் ஒடுக்கப்படும் என்ற அச்சமின்றி எழுதுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

ஏற்கனவே பல ஆண்டுகளாக வெளியிடப்பட்ட நேர்காணல்கள் மற்றும் கருத்துரைகளின் தொகுப்புகளாக உள்ள நூல்களை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தால் தடுத்து வைப்பது, சட்டபூர்வமான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

2026 மார்ச் 18 அன்று, வடக்கு இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் பாடசாலை ஆசிரியருமான தீபச்செல்வன் பிரதீபனின் நூல்கள் அடங்கிய ஒரு சரக்கை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்தது. 

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்து! | Pen Interna Urges Release Theepachelvan Books

இந்தியாவில் மறுபதிப்பிடப்பட்டிருந்த அந்த சரக்கில் நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் முன்னர் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புகள் உள்ளிட்ட ஐந்து நூல்கள் இடம்பெற்றிருந்தன.

தீபச்செல்வன் பிரதீபன், போர், நினைவு, இழப்பு, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வனுபவங்களை மையமாகக் கொண்டு நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் புனைவற்ற எழுத்துகளைப் படைத்துவரும் பரவலாக மதிக்கப்படும் இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுகிறார். 

அவரது பல படைப்புகள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை இனங்களுக்கும் மொழிகளுக்கும் இடையிலான புரிதலையும் உரையாடலையும் ஊக்குவித்துள்ளன.

பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் மூன்று நூல்களை விடுவித்தனர். இருப்பினும், “எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்” (2008 முதல் 2024 வரையிலான நேர்காணல்களின் தொகுப்பு) மற்றும் “இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்” (முன்னர் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு) ஆகிய இரண்டு நூல்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கலை மன்றம் மற்றும் அரச இலக்கிய உபக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இரண்டு நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக விடுவிக்க வலியுறுத்து 

மேலும், அவற்றில் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 120ஆம் பிரிவின் கீழ் வரக்கூடிய, அரசுக்கு எதிரான அதிருப்தி உணர்வுகளைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டு நூல்களும் பெரும்பாலும் பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் கருத்துரைகளின் தொகுப்புகளாகும். 

அவற்றின் உள்ளடக்கம் சட்டவிரோதமானது என்று எந்த நீதிமன்றமும் இதுவரை தீர்ப்பளிக்கவில்லை. மேலும், அவற்றை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கான விரிவான காரணங்களையும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்து! | Pen Interna Urges Release Theepachelvan Books

இந்த இரண்டு நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது, இலங்கையில் தமிழ் மொழி இலக்கியங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்த பரந்த கவலைகளையும் எழுப்புகிறது. 

அண்மைய ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் பிற நூல்களும், குர்ஆன் பிரதிகளும் கூட சுங்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சிறுபான்மை சமூகங்களின் குரல்களும் அவர்களின் வெளியீடுகளும் அதிகப்படியான கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன என்ற அச்சத்தை வலுப்படுத்துகிறது.

எனவே, இலங்கை அதிகாரிகள், இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வன் பிரதீபனின் அனைத்து நூல்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

வன்முறையைத் தூண்டாத இலக்கிய மற்றும் ஊடகப் படைப்புகளை தணிக்கை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு, சுங்கம் அல்லது பொது ஒழுங்கு தொடர்பான சட்டப்பிரிவுகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த எழுத்தாளர்கள் எந்தவித பாகுபாடும் தேவையற்ற அரச தலையீடும் இன்றி தங்களது படைப்புகளை வெளியிடவும், விநியோகிக்கவும், விவாதிக்கவும் உரிமை பெற்றிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி

வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி

லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு! வெளியானது பட்டியல்

லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு! வெளியானது பட்டியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015