ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா, தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தகுதி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மிகப்பெரிய இழப்பு
அந்த பயங்கரவாத தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர், தாக்குதல்களுக்குப் பிறகு, குறிப்பாக காத்தான்குடியில் முஸ்லிம் சமூகமும் கடுமையான விளைவுகளைச் சந்தித்ததாக சந்தித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சில தனிநபர்கள் தடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முழு ஒத்துழைப்பு
எனவே தாக்குதல்களுக்குப் பொறுப்பான அனைவரையும், அவர்களின் தரம், பதவி அல்லது பொருளாதார செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ஹிஸ்புல்லா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்