நிதியமைச்சை கோரும் இலங்கையின் பெரும் புள்ளி: கோட்டாபய அளித்த உறுதிமொழி
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சை யார் பொறுப்பு எடுப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கசினோ வர்த்தகர் தம்மிக்க பெரேரா நிதியமைச்சர் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சு அல்லது பிரதமர் பதவிக்கு நிகரான மற்றுமொரு பதவியை வழங்குமாறு கோட்டபாய பக்சவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு வெளிநாட்டு முதலீடு தொடர்பான அமைச்சுப் பதவியை வழங்குவதாக கோட்டபாய உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,