நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sathangani Sep 19, 2024 03:48 AM GMT
Report

புதிய இணைப்பு 

தங்காலை - நலகம பொல்தவன சந்தியில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (18) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்காலை நலகமவை வசிப்பிடமாகக் கொண்ட தேஷான் எரந்த என்ற 33 வயதுடைய திருமணமாகாத கால்நடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாடு கட்டுவதற்கு சென்ற இளைஞன் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் தேடியபோது சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் தங்கல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு | Gun Shoot In Kohuwala 43 Age Men Killed

முதலாம் இணைப்பு 

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான கொஹுவல, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதன்படி நேற்று இரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: பரீட்சை ஆணையாளரின் புதிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: பரீட்சை ஆணையாளரின் புதிய அறிவிப்பு

காவல்துறையினர் விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் கொஹுவல காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு | Gun Shoot In Kohuwala 43 Age Men Killed

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள குற்றச்சாட்டு

தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களில் காத்திருக்கும் நற்செய்தி

தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களில் காத்திருக்கும் நற்செய்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023