தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்
Sri Lanka Police
By pavan
மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலதிக விசாரணை
மேலும் இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
