ஹமாஸ் அமைப்பின் மூன்றாம் நிலை தளபதி கொல்லப்பட்டாரா..!
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் துணைத் தளபதியும், காஸாவிலுள்ள அந்த அமைப்பின் மூன்றாவது மூத்த அதிகாரியுமான மர்வான் இசா, கடந்த வாரம் இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதல் இடத்தில் இருந்ததாக பலஸ்தீனிய வட்டாரங்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சவுதி செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளன.
Ynet செய்தித் தளத்தால் மேற்கோள் காட்டப்பட்ட Asharq Al-Awsat இன் கூற்றுப்படி, இசா "தாக்கப்பட்டார், ஆனால் அவரது தலைவிதி தெளிவாக இல்லை."என குறிப்பிட்டார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இசா
காசாவை தளமாகக் கொண்ட "தகவல் பெற்ற ஆதாரங்கள்" இசா அந்த இடத்தில் இருந்ததை ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை என்று சனல் 12 தெரிவித்துள்ளது.

ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ் அட்-தின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப்பின் துணைத் தலைவராக இசா பணியாற்றுகிறார்.
காசாவில் உள்ள ஹமாஸின் தலைவரான யாஹ்யா சின்வாருடன் சேர்ந்து, ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில்
இந்த தாக்குதலில் இசா கொல்லப்பட்டதை அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் இன்னும் முழுமையாக சரிபார்க்கப்படவில்லை என்று இராணுவம் எச்சரித்தது, ஹமாஸ் இன்னும் இசா இறந்துவிட்டதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுப்பது தொடர்பாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்