யாழ் சிறைச்சாலையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்
Sri Lanka Police
Human Rights Council
Jaffna
Sri Lanka
Prisons in Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் (07) பார்வையிட சென்ற போதே, சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி