மக்களே கவனம்..! 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Department of Meteorology
Weather
Rain
Thunder
By Thulsi
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (3.02.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.
இடியுடன் கூடிய மழை
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி