மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
குறிப்பாக நகரப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நெடுந்தீவு - நல்லூர், யாழ்ப்பாண நகரப்பகுதி உள்ளி ட்ட பல இடங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் மழை பெய்ததால் சில பகுதிகளில் வீதிகளில் மழைநீர் தேங்கியதுடன் வாகனப் போக்குவரத்தும் மந்தமடைந்தது.
முறிந்து விழுந்த மரம்
இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென முறிந்து விழுந்தது.

அந்த மரமானது வீதிக்கு குறுக்காக விழுந்த காரணத்தால் போக்குவரத்து தடைப்பட்டது.
பின்னர் இதுகுறித்து வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் விரைந்து செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் குறித்த மரத்தினை வெட்டி அகற்றினர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |