கென்யா, சோமாலியாவில் வெள்ளப் பெருக்கு : 40 பேர் பலி

Africa Kenya Somalia
By Sathangani Nov 08, 2023 05:16 AM GMT
Report

கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக  40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவிய நிலையில் தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்ததால்  ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆகிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் உயிரிழந்ததுடன் பல வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வெள்ளப்பெருக்கால்  அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்


வெள்ளப்பெருக்கு அபாயம்

இதேவேளை தெற்கு சோமாலியாவின் ஜூபாலாண்ட் மாநிலத்தில் உள்ள லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை மீட்பதற்கு  அவசர மற்றும் மீட்புப் பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கென்யா, சோமாலியாவில் வெள்ளப் பெருக்கு : 40 பேர் பலி | Heavy Rains In Kenya Somalia 40 People Killed

ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

இதேபோல் அயல் நாடான கென்யா, எதியோப்பியாவிலும் கனமழை பெய்ததனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி


மோசமான பாதிப்புகள்

துறைமுக நகரமான மொம்பாசா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களான மன்டேரா மற்றும் வஜிர் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கென்யா, சோமாலியாவில் வெள்ளப் பெருக்கு : 40 பேர் பலி | Heavy Rains In Kenya Somalia 40 People Killed

மேலும் திடீர் வெள்ளத்தால்  241 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் 1,067 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் கென்யா செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கென்யாவின் வானிலை முன்னறிவிப்பாளர்கள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான குறுகிய மழைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உயிரிழந்த கடற்படை வீரர்!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உயிரிழந்த கடற்படை வீரர்!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025