இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்.
அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |