கொழும்பில் கடும் வாகன நெரிசல் - நீரில் மூழ்கிய வீதிகள்
கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
இதேவேளை இதற்கிடையில், கனமழைக்கு மத்தியில் வாகன சாரதிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
