ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்! எடுக்கப்படவுள்ள முடிவுகள்
ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Tamil Eelam Liberation Organization) தலைமை குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா (Vavuniya)- வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (10) குறித்த கூட்டம் நடைபெறுகின்றது.
ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தலைமையில் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள்
ரெலோவின், சமகால அரசியல் நிலவரங்கள், உள்ளூராட்சி தேர்தலில் முடிவடைந்துள்ள நிலையில் சபைகளில் ஆட்சியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக அறிய முடிகின்றது.
கலந்துரையாடலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், கட்சியின் முக்கியஸ்தர்களான ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சுரேன் குருசாமி உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
