ஒஸ்கார் விருது பெற்ற நடிகையை சிறையில் அடைத்த ஈரான் அரசு
ஈரானின் பிரபல நடிகை தரனே அலிடோஸ்டி, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் எதிர்ப்பாளர் ஒருவரை தூக்கிலிட ஈரானிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை கண்டித்து தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டார்.
போராட்டங்கள்
இது தொடர்பாக சர்வதேச அளவில் உரிய கவனம் செலுத்தப்படாததையும் அவர் கண்டித்ததாக பதிவில் கூறியுள்ளார்.
38 வயதான அலிடோஸ்டியும் ஒஸ்கார் விருது பெற்ற "தி சேல்ஸ்மேன்" படத்தில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் அந்நாட்டின் மேலும் இரண்டு பிரபல நடிகைகளான ஹெங்காமே கஜியானி மற்றும் கட்டயுன் ரியாஹி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
எனினும் இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். செப்டம்பர் 16 அன்று 22 வயதான மசா அமினியின் மரணத்திற்குப் பிறகு, ஈரானில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இஸ்லாமியப் புரட்சி
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் இந்த எதிர்ப்பு ஈரானுக்கு மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
IR Govt’s official newspaper is criticising Instagram in attached Tweet for shutting down #TaranehAlidoosti’s account, in order to prevent Regime’s access to her private messages.
— Pouria Zeraati (@pouriazeraati) December 18, 2022
Why do you need this info, Islamic Republic? To issue another imprisonment sentence?#MahsaAmini pic.twitter.com/61hF1BsYxw

