வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை..! இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் நேற்று(19) முற்றுகையிட்டுள்ளது.
இதேவேளை, முற்றுகையிடப்பட்ட விடுதியில் இருந்து இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டமையுடன் விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒய்வுபெற்ற இராணுவ வீரருடைய விடுதி
வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் , விடுதி முகாமையாளர் மேலும் ஒரு ஆண் உட்பட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, விடுதி முகாமையாளர் ஒய்வுபெற்ற இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சுட்சுமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் குறித்த விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.



