அமெரிக்காவில் சூறாவளி - தரைமட்டமான முதியோர் காப்பகம்!
united states
Hurricane
Damage
Nursing home
By MKkamshan
ஐக்கிய அமெரிக்காவில் வீசிய சூறாவளி முதியோர் காப்பகத்தை தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் கிரிஜ்ஹெட் நகரில் நேற்று சூறாவளி காற்று வீசியுள்ளது.
சூறாவளி தாக்கியதில் 90 படுக்கைகளை கொண்ட முதியோர் காப்பகம் தரைமட்டமானது. அந்த முதியோர் காப்பகத்தில் வயதான பலர் வசித்து வந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காப்பக இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். ஆனால் மேலும், இடிபாடுகளுக்குள் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் .அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 2 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்