உறக்கத்தில் இருந்த கணவனை கடுமையாக தாக்கிய மனைவி!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
கிளிநொச்சி - பளை காவல்துறைபிரிவுக்குட்பட்ட புலோப்பளை பகுதியில் உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளை உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குட்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலுக்கு உள்ளாகிய மனைவி
மேலும், மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

