ஹட்டனில் கோர விபத்து! மூவர் பலி
srilanka
accident
death
hutton
By S P Thas
ஹட்டன் - ரொசல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் அவர்களின் பிள்ளை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ரொசல்ல ரயில்வே நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 9 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்