குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன் - விடுதலையான நளினியின் நெகிழ்ச்சியான அறிவிப்பு

Rajiv Gandhi Tamil nadu Attempted Murder Supreme Court of India
By Sumithiran Nov 12, 2022 05:50 PM GMT
Report

நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன். இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன் என விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி செய்தியாளரைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மக்களுக்கு நன்றி

குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன் - விடுதலையான நளினியின் நெகிழ்ச்சியான அறிவிப்பு | I M Going To Live As A Housewife Nalini

பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது, தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. 

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி.. இத்தனை காலமாக எங்களுக்கு உதவிய ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதேபோல மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன்

குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன் - விடுதலையான நளினியின் நெகிழ்ச்சியான அறிவிப்பு | I M Going To Live As A Housewife Nalini

நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன். இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன். இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை.  

சென்னையில் நாளை நான் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளேன். என்னுடன் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக ஆஜரான வழக்கறிஞரும் செய்தியாளர்களைச் சந்திப்பார். அப்போது கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்"   

இனிமேல் என்ன சந்தோஷம்? 6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

 என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் சகோதரர் பாக்கியநாதன், "நளினியும் சரி எங்கள் குடும்பத்தினரும் சரி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் இனிமேல் குடும்பத்துடன் சாதாரண ஒரு வாழ்க்கை வாழப் போகிறார். முதல்வரிடம் நேரில் நன்றி தெரிவிக்க அவரிடம் நேரம் கேட்க முயன்று வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

  நேரில் பேசக் கூட முடியவில்லை

குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன் - விடுதலையான நளினியின் நெகிழ்ச்சியான அறிவிப்பு | I M Going To Live As A Housewife Nalini

நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களால் இரண்டு வார்த்தை கூட நேரில் பேசிக் கொள்ள முடியவில்லை. முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைத் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025