மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு
IBC Tamil
Mannar
Floods In Sri Lanka
By Sumithiran
ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உலருணவுப்பொருட்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன்படி இதன் முதலாவது செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தது.அடுத்த உதவிச் செயற்பாடு இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவில் இயங்கும் மீரா ஜூவலர்ஸ்
இதற்கான அனுசரணையை பிரித்தானியாவில் இயங்கும் மீரா ஜூவலர்ஸ் வழங்கியிருந்தது.

சுமார் 05 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மன்னார் தொழில்நுட்ப கல்லூரியில் தங்கியுள்ள மக்களுக்கும் தேக்கம் மற்றும் கட்டைக்காடு பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |














16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி