மூன்று தசாப்த கால ஊடகப் புரட்சி...! வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் ஐபிசி தமிழ் வானொலி
உலகத் தமிழர்களின் முதன்மை ஊடகமான ஐபிசி தமிழ் (IBC Tamil) வானொலி, காற்றில் தமிழ் ஓசையைப் பரப்பி இன்றுடன் வெற்றிகரமாக 30 ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது.
மூன்று தசாப்தங்களாகத் தடையின்றித் தொடர்ந்து வரும் இந்த வரலாற்று மைல்கல்லை முன்னிட்டு தங்களுக்குப் பேராதரவு வழங்கி வரும் உலகளாவிய தமிழ் மக்களுக்கு ஐபிசி தமிழ் நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துகொள்கின்றது.
கடந்த 1990 களின் காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் ஏக்கத்தைத் தீர்க்கும் ஒரு பாலமாகத் தன் பயணத்தைத் தொடங்கியது ஐபிசி தமிழ்.
தமிழ் மக்கள்
செய்தி, கலை, பண்பாடு மற்றும் அரசியல் எனத் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த பல்வேறு சுவையான மற்றும் காத்திரமான நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

ஒரு சிறிய ஒலியலைத் தொடக்கமாக ஆரம்பித்த இன்று உலகத் தமிழர்களின் குரலாக ஐபிசி தமிழ் ஒலித்துக்கொண்டிருப்பதற்கு எங்களின் அன்பான நேயர்களே முதன்மைக் காரணம்.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த 29 ஆண்டுகளாக எங்களை ஒரு ஊடகமாகப் பார்க்காமல், தங்களின் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.
தொடரும் பேராதரவு
மக்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தொடரும் பேராதரவுமே எங்களை இந்த 30 ஆவது ஆண்டின் நுழைவாயிலில் கம்பீரமாக நிறுத்தியுள்ளது.
அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் ஒட்டுமொத்த ஐபிசி தமிழ் குடும்பத்தின் சார்பாகக் கோடான கோடி நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப வானொலியில் தொடங்கி இன்று தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் எனப் பன்முகத்தன்மையோடு ஐபிசி தமிழ் வளர்ந்து நிற்கிறது.
எத்தனையோ சவால்களைக் கடந்தும் தமிழ் மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் உள்ள பற்றினால் மட்டுமே சாத்தியமான இந்த ஊடகப் பயணம், இன்னும் பல தசாப்தங்களுக்குத் தமிழர்களின் உலகளாவிய குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என ஐபிசி தமிழ் உறுதியளிக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்