முதல் போட்டியில் படுதோல்வியடைந்த சிறிலங்கா அணி..!
புதிய இணைப்பு
2022 ஆம் ஆண்டுக்கான 20 உலகக்கிண்ணத் தொடர் இன்று ஆவுஸ்திரேலியாவில் ஆரம்பமான நிலையில் முதலாவது போட்டியில் நமீபியாவை எதிர்த்தாடிய சிறிலங்கா அணி படுதோல்வியடைந்ததுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகள் நஷ்டத்திற்கு 163 ஓட்டங்களை பெற்றிருந்தது.
164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.
இந்நிலையில், 2022 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் நமீபிய அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியானது இன்று 9.00 மணியளவில் ஆரம்பமானது.
நாணய சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது.
துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்குகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று (16) அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.
முதல் சுற்றில் இலங்கை அணி ஏ பிரிவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், இன்றைய போட்டியில் இலங்கை - நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி முற்பகல் 9. 30 மணியளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமை

அவுஸ்திரேலியாவின் கீலோங்கில் (Geelong) உள்ள சீமன்ட்ஸ் மைதானத்தில் T20 உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவதோடு நமீபிய அணிக்கு ஜெராட் எரஸ்மஸ் தலைமை தங்கவுள்ளார்.
16 நாடுகள் இந்த வருட சுற்றுப்போட்டியில் இணையவுள்ளதுடன், இலங்கை உட்பட 08 நாடுகள் இன்று முதல் சுற்றுப் போட்டிகளுக்காக நேருக்கு நேர் மோதவுள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதற்கு முன்னதாக ஒரேயொரு இருபதுக்கு இருப்பது போட்டியில் விளையாடியுள்ளதோடு, அதில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது