இலங்கையின் திட்டத்திற்கு ஐ.எம்.எஃப் அனுமதி - சற்றுமுன் அறிவிப்பு
இரண்டாம் இணைப்பு
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபைக் கூட்டம் தற்போது வொஷிங்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.
அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது.
இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பாரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.
முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ் முதலாவது தவணையாக சுமார் 0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் ஆரம்பப் பகுதியான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் தீர்மானம்
இலங்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்கு கூடவுள்ளது.
நாளை(21) காலை 8.30 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்
