நுட்பமாக RDX ஜ வடக்குக்கு கொண்டு வந்த விடுதலைப் புலிகள் - பயன்பட்ட இராணுவ கடிதங்கள்: பாட்டலி
விடுதலைப் புலிகள் பங்களாதேஷ் இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ கடிதங்களைப் பயன்படுத்தி வடக்குக்கு பொருட்கள் கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மிக நுட்பமாக செயற்பட்டவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளில் வடக்கு பகுதிக்கு யூரியா உரம் (Ammonium nitrate) கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது.
தற்கொலை குண்டு தாக்குதல்
ஏனென்றால் யூரியா (Ammonium nitrate) எரிபொருளில் கலந்தவுடன் பாரிய வெடிப்பையும் தீயையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

இந்தியாவில் கடந்த 10 ஆம் திகதி, டில்லி செங்கோட்டையில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் கைதானவர்களிடமிருந்து யூரியா (Ammonium nitrate) கைப்பற்றப்பட்டது.
இவை குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தடை செய்திருந்தார்.
ஆனால் நுட்பமாக செயற்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் பங்களாதேஷ் இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ கடிதத்தை பயன்படுத்தி பங்களாதேஷ் இராணுவம் கொள்வனவு செய்வது போல் இருபது டொன் RDX (Cyclonite) வடக்குக்கு கொண்டு வந்தனர்.
அதற்கு முன்நின்று செயற்பட்டவர் குமரன் பத்மநாதன் அவ்வளவு பெருமளவான RDX வெடிக்கும் நச்சுப் பொருட்கள் கொண்டு வந்த பின்னர் எதற்கு யூரியாவை தடை செய்திருந்ததால் அதில் விவசாயிகளே பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |