இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Economy of Sri Lanka
CBSL
By Sathangani
9 months ago

Sathangani
in பொருளாதாரம்
Report
Report this article
110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது.
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திறைசேரி உண்டியல்கள்
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலவிற்பனை செய்ய்பபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி