யாழில் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

jaffna pregnant corona vaccine
By Sumithiran Aug 14, 2021 06:15 PM GMT
Report

தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பிணிகள் தமது கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாதென மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் அ.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏழு கர்ப்பிணிப் பெண்கள் இறந்திருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்குள் இது மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.இதுவே இந்த கொரோனா தொற்று தாக்கத்தின் கடுமையை உணர்த்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கான தொற்று நோய் தாக்கம் என்பது மற்றவர்களை விட கூடுதலானது. உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மிகக் கடுமையான நோய் வருதல், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படல், செயற்கை சுவாசம் அளிப்பது, மரண வீதம் என்பன மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கின்றது .

தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு போடுவது பாதுகாப்பானதே.இந்த தடுப்பூசி உயிரிழப்பையும் தீவிர தொற்று நிலைமையையும் தடுக்கும். தடுப்பூசிகளால் குறுகிய கால பாதிப்புகள் இதுவரை பதிவாகவில்லை. நீண்ட கால பாதிப்பு தொடர்பில் எதுவித சான்றும் இல்லை . அதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தடுப்பூசி போட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களுக்கு ஏற்படுவது போல உடல் நோ ஏற்படலாம்.அதற்கான வைத்திய ஆலோசனைகளை பெறமுடியும். தற்போதைய நிலையின் படி இலங்கையிலுள்ள சகல கர்ப்பிணிப் பெண்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும். கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கையில் இதுவரைக்கும் சினோபாம் தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு பைசர் ,மொடோனா,ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசிகளும் வழங்கப்படலாம்.

கர்ப்பிணியாவதற்கு முதலோ அல்லது கர்ப்பிணியானதை தெரியாமலோ முதல் டோஸாக அஸ்ரா செனகாவை எடுத்தவர்கள் இரண்டாவது டோஸாக அஸ்ரா செனகாவையே எடுக்க முடியும். இரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம் என்கிற சந்தேகம் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இனிமேல் முதலாவது டோஸாக அஷ்ரா செனகா தடுப்பூசி வழங்கப்படாது.

பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி வழங்க முடியும். தடுப்பூசி போட்டதற்காக பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை. திருமணம் செய்ய இருப்பவர்கள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் .

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல் படி எந்த ஒரு தடுப்பூசியும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இலங்கையில் கருத்தடை செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நாங்கள் தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பத்திற்கு தீங்கு செய்யக்கூடாது.

கர்ப்பிணிப்பெண்கள் தடுப்பூசியைப் பெற்றாலும் ஏனையவர்களைப் போல சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். கர்ப்ப காலங்களில் வாந்தி எடுத்தல், உடம்பு நோ,கால் நோ ,மூச்சுவிட சிரமம் போன்றவை உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் விடயங்கள். ஆனால் கொரோனா அறிகுறிகளையும் இதனையும் ஒன்றாக நினைத்து வைத்திய ஆலோசனையைப் பெறாமல் இருக்க சிலர் நினைக்கிறார்கள்.

ஆகவே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது. கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் உணவு முறைகள் தொடர்பாக தவறான கருத்துகள் இருக்கின்றது.

உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் சாப்பாடு எதையும் சாப்பிட முடியும் .போதுமான அளவு தண்ணீர் பழங்களை உண்பது சிறப்பானது. இயலுமான அளவு தற்போதைய காலத்தில் வைத்தியசாலைக்கு அதிகமானவர்கள் கர்ப்பிணிகளுடன் வருவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

அத்துடன் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வரும் போது குழந்தைப் பிள்ளைகளை அழைத்து வருவதை தவிருங்கள் என்றார்.  

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020