தென்னிலங்கையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தென்னிலங்கை பகுதியில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளானோர் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கண்டி, காலி, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தீவிர நடவடிக்கை

மேலும், அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் 36 சுகாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் நோய் கண்டறிவதற்கான கருவிகள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.