லொத்தர் சீட்டு விலை உயர்வு - விற்பனையில் வீழ்ச்சியா..!
லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில் நேற்று (6) லொத்தர் சீட்டு விற்பனை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் மிஸ் ஹாசினி ஜயசேகர கூறுகையில்,
வெற்றிக்கு முக்கிய காரணம்

நாடு முழுவதும் உள்ள பல விற்பனை பிரதிநிதிகள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் லொட்டரிகளை விற்பனை செய்து பரிசுத்தொகையை அதிகரிப்பதே விற்பனை வெற்றிக்கு முக்கிய காரணம்.
குறிப்பாக, தேசிய லொத்தர் சபையின் சில லொத்தர் சீட்டுகளின் பரிசுத் தொகை இருமடங்காகவும், மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சில லொத்தர் சீட்டுகளின் பரிசுத் தொகை 2000 இலிருந்து 5000 ஆகவும், பரிசுத் தொகை 10000 ரூபாவிலிருந்து 10,0000. ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லொத்தர் விற்பனை

விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கான விசேட பதவி உயர்வு திட்டம் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் என பொது முகாமையாளர் மிஸ் ஹாசினி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அனுர ஜயரத்ன, எதிர்பார்த்தது போன்று நாடளாவிய ரீதியில் லொத்தர் விற்பனை மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும், லொத்தர் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் 98 வீத விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்