ரி20 உலகக் கிண்ண போட்டியின் பெரும் சமர்! மோதப்போகும் இந்திய - பாகிஸ்தான் அணிகள்
2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (15) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவுள்ளது.
இரவு போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டம், உள்ளூர் நேரப்படி மாலை 7.00 மணிக்கு தொடங்குகிறது. இது ‘A’ குழுவுக்கான முக்கியமான ஆட்டமாகும்.
போட்டிக்கான ஏற்பாடு
இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்த போட்டி நடைபெறுமா என்பதில் பெரும் சர்ச்சைகள் நிலவின. ஒரு கட்டத்தில் போட்டியை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
ஆனால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்க சம்மதித்தது.
விசேட பாதுகாப்பு
இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் நேற்று முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் டிக்கெட் பெறும் நோக்கில் மைதானத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, இன்றைய போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 600 போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளதுடன் முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் இணைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 மணி நேரம் முன்